Thursday, September 16, 2010

மரணம்

மரணத்தை குறித்து பயப்படுபவர்கள் அடிப்படையில் வாழ்வைக்குறித்து பயப்படுபவர்களே. அவர்கள் வாழவில்லை. எனவேதான், அவர்கள் மரணத்துக்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் இயற்கையானதே. நீ சிறிதும் வாழவில்லை என்றால், நீ கண்டிப்பாக மரணத்திற்கு பயந்தேயாக வேண்டும். ஏனெனில் மரணம் நீ வாழ்வதற்குரிய வாய்ப்பை பறித்து சென்றுவிடும். ஆனால் நீ இன்னும் வாழ்வே இல்லை. எனவே மரணம் வந்து விட்டால் , பிறகு நீ எப்போது வாழ்வது?
ஆழமாக வாழ்ந்த ஒருவன் மரணத்திற்கு பயப்படுவதில்லை. அவன் நிறைவாயிருக்கிறான். மரணம் வந்தால் அவன் அதை வரவேற்க முடியும். ஏற்றுக்கொள்ள முடியும். இங்கு வாழ்க்கை கொடுக்கக்கூடியது. எல்லாவற்றையும் வாழ்க்கை கொடுத்துவிட்டது. வாழ்விலிருந்து அறியக்கூடிய எல்லாவற்றையும் அவன் அறிந்து விட்டான். இப்போது அவனால் மரணத்திற்குள் சுலபமாக செல்லமுடியும். அவன் மரணத்திற்குள் செல்லவிரும்புவான்.
நன்றி : தந்த்ரா ரகசியங்கள் : ஓஷோ

No comments:

Post a Comment