Monday, September 6, 2010

மனிதனின் (வெல்லமுடியாத) பாலுணர்வு

நம்மிடம் இரண்டுவிதமான செயல்தன்மைகள் உள்ளது. ஒன்று: அறிவுசெயல்தன்மை. மற்றது : தானியங்கு செயல்தன்மை. இதுவரை செய்தறியாத புதிய வேலைகளை அறிவுசெயல்தன்மை செய்கிறது. உதாரணமாக நீங்கள் சைக்கிள் ஒட்டிப் பழகுவது , கார் ஒட்டிப் பழகுவது போன்றவைகள். அதாவது ஒரு செயல் பழக்கப்படும் வரை அறிவுசெயல்தன்மை அவ்விஷயத்தில் செயல்படுகிறது.

அது பல முறை செய்து பார்த்த பின் அது பழக்கமாகி தானியங்கு செயல்தன்மைக்கு வந்து விடுகிறது.

உங்களுடைய தானியங்கு செயல்தன்மை செய்யும் சில செயல்களை தெரிந்து கொள்வோம். வழக்கம்போல - காலையில் எழுந்து முகம் கழுவி , பல் துலக்கி என ஆரம்பித்து இரவு படுத்து உறங்கும் வரை - ஏன் உறக்கத்திலும் கூட உங்கள் தானியங்கு செயல்தன்மை தான் செயல்படுகிறது. நீங்கள் எந்தெந்த செயலில் முழு கவனம் வைத்து உங்களை ஈடு படுத்துகிறீர்களோ அந்த செயல்கள் மட்டுமே அறிவுசெயல்தன்மையின் செயல்களாகும்.

இது( இவ்விரு செயல்தன்மையும் ) உங்கள் பல்லாயிர பிறவிகளுக்கு முன் நீங்கள் 'புறப்பட்ட' அந்த ஒரு செல் உயிரியிலிருந்தே துவங்கி விட்டது. அந்த ஒரு செல் உயிரியிலிருந்தே தொடர்ந்து வரும் பழக்கமே இந்த சுந்தரனும், இதைப்படிக்கும் நீங்களும். நமக்குள் இருக்கும் வித்தியாசமும்.

அந்த பழக்கங்கள் உங்களை வழி நடத்துகின்றன. எதுவெல்லாம் உங்களுக்கு ( முப்பிறவிகளிலும் ) ஏற்கனவே பழக்கமானதோ அதுவெல்லாம் மீண்டும் உங்கள் வாழ்வில் நடக்கும்பொழுது நீங்கள் சகஜ நிலையை உணர்கிறீர்கள். பழக்கமில்லாத ஒன்று நடந்தால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் பல்லாயிர பிறவிகள் எடுத்துவிட்டதால் ( பிறவி தவறாமல் வந்த ) இனப்பெருக்கம் உங்களுடைய நீண்ட பழக்கம்.

( இது உங்கள் மைய்ய பழக்கம் ) இதனாலேயே, இதை அடிப்படையாக கொண்டே உங்கள் மன அமைப்பு செயல்படுகின்றது. இந்த பழக்கத்திற்கு வசப்படாத உயிர்களே நீங்கள் காண முடியாது.

இதனாலேயே இந்த பாலுணர்வு நம்மால் வெல்ல முடியாததாக இருக்கிறது.

No comments:

Post a Comment