Monday, September 6, 2010

த்யானத்தின் ஒரு அடிப்படையான விஷயம்.

தினசரி காலையில் தியானிப்பது யார்? த்யானிக்க அமரப்போவது வரை என்னவோ இந்த 'சுந்தரம்' தான். த்யானம் கூடிவருகையில் கவனித்தால் தான் தெரிகிறது த்யானிப்பது சுந்தரமல்ல! இந்த சுந்தரத்திற்க்குள் இருக்கும் எழுபது லட்சம் கோடி ஜீன்கள் என்பது. இந்த சுந்தரம் என்பது அந்த எழுபது லட்சம் கோடி ஜீன்களின் தொகுப்பான மன அமைப்பு. அந்த முதல்உயிரி அமீபாவிலிருந்து பயணித்து இன்றுவரை தொடர்ந்து சுய தேடலில் இருப்பது இந்த ஜீன்கள் தான்.

பல்லாயிரமான பிறவிகளும் இந்த ஜீன்களுக்குதான் இந்த சுந்தரத்துக்கல்ல!

இந்த பிறவியில் இந்த ஜீன்களின் தொகுப்பான இந்த மனதின் பெயரே சுந்தரம். நீங்கள் பல பிறவிகள் எடுத்து விட்டீர்கள் என்றால் அது உங்களுள் இருக்கும் ஜீன்களுக்கே பொருந்தும்.

த்யானத்திலும் த்யானிப்பது ஜீன்களாக இருந்தால்தான் அது த்யானம். அது சுந்தரமாக இருந்தால் த்யானமே கூடி வராது. ஏனெனில் சுந்தரம் ஒரு மன அமைப்பு. மனதை கடந்தால்தான் த்யானம் கூடும். மன அமைப்பை கடந்து பார்த்ததால் அங்கிருப்பது இந்த ஜீன்களே!.

இந்த ஜீன்களின் சுய தேடலே ' அசைவற்ற, சாட்சித்தன்மையான அந்த ஒளிப்பொருந்திய சுத்த அறிவேயாகும்'. அது எங்கும் நீக்கமற நிறைந்து பூரணமாக இருப்பது.

அதுவே பூர்ணம்.

No comments:

Post a Comment